Sunday, July 17, 2011

இந்திய ஏற்றுமதி உலகம் 5


இந்திய ஏற்றுமதி உலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
சென்ற வாரம் என்னென்ன நிகழ்வுகள் என்று பார்ப்போம்.

ஏலக்காய் மணக்கிறது

ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு சந்தைகளில் தேவைகள் அதிகரித்திருப்பதால் ஏலக்காய் சிறிது அதிகமாகவே மணக்கிறது. கேரளாவைத் தவிர, தமிழ்நாட்டில் போடிநாயக்கனூரிலும் வரத்து அதிகமாகி உள்ளது. அதிகபபடியான வரத்து விலைகளை ஏறவிடாமல் தடுக்கிறது. இந்த சீசனில் வரத்து சுமார் 11529 டன்னாக இருந்தது. இது சென்ற வருடம் இதே சீசனை விட சுமார் 20 சதவீதம் கூடுதலாக இருந்தது. சராசரி விலை சென்ற சீசனில் கிலோ 867 ரூபாயாகவும், இந்த சீசனில் 1012 ரூபாயாகவும் இருந்தது.


இந்தியா மலேஷியா வர்த்தக ஒப்பந்தம்

இந்தியா மலேஷியா வர்த்தக ஒப்பந்தம் ஜுலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. என்ன லாபம்? இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பாசுமதி அரிசி, மாம்பழம், முட்டைகள், வாகனங்கள், காட்டன் கார்மெண்ட்ஸ் ஆகியவைகளுக்கு அங்கு குறைந்த இறக்குமதி வரி அல்லது வரி விலக்கு இருக்கும். இதனால், இந்திய பொருட்கள் அங்கு அதிகம் விற்க ஏதுவாகும். இந்த ஒப்பந்தம் புரொபஷனல் வேலையாட்கள் இந்தியாவிலிருந்து அங்கு வேலைக்கு செல்ல வழிவகுக்கும். தற்போது இந்திய மலேஷிய வர்த்தகம் சுமார் 10 பில்லியன் டாலர் அளவில் நடந்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தினால், இது 2015ம் வருடத்திற்குள் 15 பில்லியன் டாலர் அளவுக்கு கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


500 பில்லியன் டாலர் ஏற்றுமதி கனவு எப்படி நனவாகும்?

எப்படி 500 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை 2013-14 ம் வருடத்திற்குள் எட்டுவது என்பது குறித்து அரசாங்கம் ஒரு பேப்பர் வெளியிட்டுள்ளது. இதில் எஞ்சினியரிங் ஏற்றுமதி 125 பில்லியன் டாலர் அளவு எட்டுமென்றும், பெட்ரோலியம் பொருட்கள் 80 பில்லியன் டாலர் எட்டுமென்றும், மருத்துப் பொருட்கள் 25 பில்லியன் டாலர் எட்டுமென்றும், கெமிக்கல்ஸ 19 பில்லியன் டாலர் எட்டுமென்றும், எலக்ட்ரானிக்ஸ் 17 பில்லியன் டாலர் எட்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


நெய் என்றால் உருகாத மனது

தற்போது நெய் என்றாலே பலர் காத தூரம் ஔடிவிடுவர். ஏனெனில் அது கொழுப்புச் சத்து மிகுந்தது என்று. ஆனால், ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவது மிகவும் நல்லது என்று அமுல் நிறுவனம் தற்போது அதை பிரபலப்படுத்த தொடங்கியுள்ளது. நெய்க்கு 5000 ஆண்டு கால வரலாறு உள்ளது எனவும், ஆயுர்வேதத்தில் அதன் சிறப்புக்களை பற்றி விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது எனவும், ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன் நெய் உட்கொண்டால் அது உடல்நிலையை சீராக வைக்க உதவும் எனக்கூறி பல நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகப்படுத்தி வருகிறது. தற்போது 30 நாடுகளுக்கு நெய் ஏற்றுமதி செய்து வருகிறது. சென்ற வருடம் சுமார் 9000 கோடி ரூபாய்களுக்கு நெய் விற்பனை செய்துள்ளது, அதில் 900 கோடி ரூபாய் அளவு ஏற்றுமதி செய்துள்ளது.


மாம்பழமாம் மாம்பழம்

உலகத்தில் அதிக அளவு மாம்பழம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா ஆகும். இந்தியா 15 மில்லியன் டன் மாம்பழம் உற்பத்தி செய்கிறது. இது உலக உற்பத்தில் 50 சதவீதம் ஆகும். இந்தியாவில் 1000 மாம்பழம் வெரைட்டிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், 20 வகைகள் தாம் மக்களிடையே மிகவும் பிரபலமானவை. இதில் அல்போன்சா, கேசர், பங்கனபள்ளி, தசேரி, லாங்டா, சாவுசா ஆகிய வகைகள் மிகவும் பிரபலமானவை. இந்தியா சென்ற வருடம் சுமார் 50 மில்லியன் டாலர் ரூபாய் அளவிற்கு மாம்பழம் ஏற்றுமதி செய்துள்ளது. அதிகம் இறக்குமதி செய்த நாடுகள் கல்ப் நாடுகள், ஐரோப்பா, தென்கிழக்கு ஆசிய நாடுகளாகும். மாம்பழக் கூழும் இந்தியாவிலிருந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.


கேள்விக்கு என்ன பதில் ?
வினய் சேது

கேள்வி: ஏற்றுமதியை பகுதி நேர தொழிலாக செய்ய முடியுமா?

பதில்: தற்போது நீங்கள் வேலை செய்து வருபவராக இருந்தால், ஏற்றுமதியின் ஆரம்பத்தை பகுதி நேரமாக செய்வது நல்லது. ஏனெனில் ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைப்பது முதலில் சிறிது கடினம். அதுபோல சமயங்களில் உங்களை நீங்களே தைரியப்படுத்திக் கொள்ள தற்போது செய்து வரும் வேலை உதவியாக இருக்கும்.


கேட்டவர்கள் பலர்


கேள்வி: எத்தனை பொருட்கள் ஏற்றுமதி செய்யலாம்?

பதில்: பலரும் கேட்கும் கேள்வி இது. நீங்களே தயாரிப்பாளராக இருக்கும் பட்சத்தில், நீங்கள் தயாரிக்கும் பொருட்களை மட்டும் முதலில் ஏற்றுமதி செய்யத் தொடங்குங்கள். வேறு ஒருவர் தயாரிக்கும் பொருட்களை ஏற்றுமதி செய்ய நினைத்தால், முதலில் அந்தப் பொருட்களை பற்றி நன்கு தெரிந்து கொள்ளுங்கள். பின்னர் நான்கு அல்லது ஐந்து பொருட்களுக்கு மேல் ஏற்றுமதி செய்ய நினைக்காதீர்கள். இந்த முறை உங்களுக்கு வெற்றியை தரும்.


இந்த வார இணையதளம்

ஏற்றுமதி சம்பந்தமாக பல நாடுகளுக்கு செல்ல வேண்டியிருக்கும், பல மக்களை பார்க்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு நாட்டிலும் பழக்க வழக்கங்கள் வித்தியாசப்படும். எந்த நாட்டுக்கு செல்லும் போது எப்படி அந்த நாட்டவருடன் பழக வேண்டும், பேச வேண்டும், எப்படி உடைகள் அணியவேண்டும் என்பதை எடுத்துக் கூறும் இணையத்தளம் http://www.executiveplanet.com/


உங்கள் கேள்விகளை அனுப்பி வைக்கவேண்டிய ஈமெயில் முகவரிSethuraman.sathappan@gmail.com

No comments:

Post a Comment