Monday, October 24, 2011

ஏற்றுமதி உலகம் 15

ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்

உலகளவில் பங்குச் சந்தைகள் பரபரத்துக் கொண்டிருந்தாலும், தங்கம், வெள்ளி ஏறி இறங்கிக் கொண்டிருந்தாலும், இந்திய ஏற்றுமதி உலகம் ஒரு சீரான இயக்கத்திலேயே இருக்கிறது. ஆகஸட் மாத இந்திய ஏற்றுமதியும் இதற்கு ஒரு சான்றாக இருக்கிறது.


டெக்னிகல் டெக்ஸடைல்ஸ்

சாதாரண டெக்ஸ்டைல்சை விட டெக்னிகல் டெக்ஸ்டைல்ஸ்  ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளது என்று முன்பே கூறியிருந்தோம். அந்தத் துறையில் நாம் முன்னேறி வருகிறோம். இந்தத் துறைக்கு அரசாங்க உதவிகளும் கிடைத்து வருகின்றன. இந்த துறை 2016-17 வருடத்தில் 31.4 பில்லியன் அளவிற்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (அதாவது கிட்டதட்ட 152,000 கோடி ரூபாய்கள் மதிப்புள்ளதாக இந்த துறை இருக்கும்). டெக்னிகல் டெக்ஸ்டைல்ஸ்  துறையில் மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ், ஜியோ டெக்ஸ்டைல்ஸ், ஆட்டோமோடிவ் டெக்ஸ்டைல்ஸ், அக்ரோ டெக்ஸ்டைல்ஸ், தீயனைப்பு வீரர்கள் பயன்படுத்தும் உடைகள், புல்லட் புரூப் உடைகள், விண்வெளி வீரர்களின் உடைகள் போன்றவையும் அடங்கும். இதற்காக சமீபத்தில் மும்பையில் ஒரு உலகளவிலான கண்காட்சி நடந்தது குறிப்பிடதக்கது.




நறுமன பொருட்களின் ஏற்றுஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் நறுமன பொருட்களின் ஏற்றுமதி 23 சதவீதம் (சென்ற வருடம் இதே காலத்தை விட) குறைந்தது. காரணம் என்ன தெரியுமா? சைனாவிற்கு மிளகாய் ஏற்றுமதி வாய்ப்புக்கள் குறைந்தது தான். இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் நறுமணப் பொருட்களில் மிகவும் முக்கியமானது மிளகாய். சென்ற வருடம் 255000 டன்கள் ஏற்றுமதி செய்திருந்தோம், ஆனால் தற்போது 195000 டன்னாக இது குறைந்திருந்தது. இது தவிர கொத்துமல்லி, ஜீரா ஏற்றுமதிகளும் குறைந்திருந்தன. அதே சமயம் ஏலக்காய், மிளகு போன்றவைகளின் ஏற்றுமதி கூடியிருந்தது






இந்திய கடலுணவு பொருட்கள் சீனாவிற்கு
அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பிரச்சனைகள் தலைக்தூக்கி இருக்கும் சமயத்தில் இந்தியாவிலிருந்து கடலுணவுப் பொருட்கள் அதிக அளவில் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவது ஒரு நல்ல செய்தியாகும். சீன இறக்குமதியாளர்கள் இடைத்தரகர்கள் இல்லாமல் இந்திய ஏற்றுமதியாளர்களிடமிருந்து நேரடியாக வாங்க விரும்புகின்றனர். இந்தியாவிலிருந்து கடலுணவுப் பொருடக்ள் இறக்குமதி செய்வதில் தற்போது சீனா முன்னணி  வகிக்கும் அளவிற்கு முன்னேறி வருகிறது. கிட்டதட்ட 15 சதவீத ஏற்றுமதி சீனாவிற்கு நடைபெறுகிறது. தாய்லாந்தில் வெள்ளத்தால் அதிக கடலுணவு ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருப்பதால் இந்திய ஏற்றுமதிகளுக்கு வாய்ப்புக்கள் கூடி வருகிறது. இந்தியாவில் குஜராத்திலிருந்து தான் அதிகளவு ஏற்றுமதி கடலுணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகளில் டிமாண்ட் குறைந்து வருகிறது.


தாய்லாந்தும், அரிசி ஏற்றுமதியும்
தாய்லாந்து நாடு அரிசி ஏற்றுமதியில் சிறந்து விளங்குவது எல்லோரும் அறிந்ததே. அந்த நாட்டு அரசாங்கம் விவசாயிகளின் வாழ்க்கையை வளப்படுத்துவதற்காக தற்போதைய நெல் விலையில் 50 சதவீதம் கூடுதலாக கொடுத்து விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்கிறது. இதனால் வெளிவியாபாரிகளும் அவ்வாறு கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது. அப்படி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது, வெளிநாட்டு விலைகளுக்கு ஏற்ப விற்க இயலுவதில்லை. ஆதலால், அங்கு ஏற்றுமதி குறையும் அபாயம் உள்ளது. நமது நாட்டு ஏற்றுமதியாளர்கள் இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்.


திருப்பூர் ஏற்றுமதி
சாதரணமாக திருப்பூர் நகரின் ஏற்றுமதி வருடத்திர்கு சுமார் 18000 கோடி ரூபாய் அளவில் இருக்கும். தற்போது நிலவி வரும் டையிங் யூனிட் பிரச்சனைகளால் அங்கு ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் இந்த வருட ஏற்றுமதி 11500 முதல் 12000 கோடி ரூபாய் வரை தான் இருக்கும் என கூறப்படுகிறது. சாயப்பிரச்சனை சுமூகமாக தீர்ந்து ஏற்றுமதி கூடினால் அது திருப்பூருக்கும் நன்மை, இந்திய ஏற்றுமதிக்கும் நன்மை.


கேள்விக்கு என்ன பதில்?
துரை
திருச்சி

கேள்வி

பில் ஆப் லேடிங் என்றால் என்ன?
பதில்

பில் ஆப் லேடிங் என்பது கப்பல் சரக்கு ரசீது என தமிழில் அழைக்கப்படும். அதாவது ஏற்றுமதி சரக்குகளை கப்பல் மூலமாக அனுப்பும் போது கொடுக்கப்படும் ரசீது ஆகும். இது ஏற்றுமதியில் மிகவும் முக்கியமான டாக்குமெண்டாகும்.து சாதாரணமாக 3 ஒரிஜனலாக கொடுக்கப்படும். இதில் நீங்கள் ஏற்றி அனுப்பும் சரக்குகளின் முழு விபரமும் இருக்கும். வாங்குபவர் விலாசம், விற்பரின் விலாசம், ஏற்றி அனுப்பப்படும் தேதி, என்ன சரக்கு அனுப்பப்பட்டுள்ளது, சரக்கின் எடை, எங்கிருந்து எங்கு வரை அனுப்பப்பட்டுள்ளது, சரக்குக்கட்டணம் கட்டப்பட்டுள்ளதா இல்லையா?, ஏற்றி அனுப்பிய தேதி, கப்பலின் பெயர் போன்ற விபரங்கள் அடங்கியிருக்கும். இது ஒரு நெகோஷியபுள் இண்ஸ்ட்ருமெண்டாகும். அதாவது, அதை வைத்திருப்பவர் கையெழுத்திட்டு வேறு ஒருவருக்கு மாற்றிக் கொடுக்கலாம்.


இந்த வார இணையதளம்www.eudict.com
பல சமயங்களில் குறிப்பிட்ட சில மொழிகளின் வார்த்தைகளுக்கு அர்த்தம் நமக்கு பிடிபடாது. ஆங்கிலத்தில் இருந்து தமிழில் என்றால் டிக்ஷ்னரி எடுத்து பார்த்து விடலாம். ஆனால், வேறு மொழிகள் என்றால் கடினம். இதற்காகவே இந்த இணையதளம் இருக்கிறது. 30 மொழிகளிலிருந்து ஆங்கிலத்திற்கு வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள உதவுகிறது. அது போல ஆங்கிலிருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும், ஜெர்மன் மொழியில் இருந்து தமிழுக்கும் வார்த்தைகளின் அர்த்தங்களை புரிந்து கொள்ள உதவுகிறது. மிகவும் உபயோகமான ஒரு இணையதளம். அதிகமாக ஐரோப்பிய யூனியன் நாடுகளின் மொழிகளின் வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டுபிடிக்க உதவும்.

தங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களுக்கும் எழுத வேண்டிய ஈமெயில் முகவரி sethuraman.sathappan@gmail.com.

No comments:

Post a Comment