Sunday, January 8, 2012

அரிசி ஏற்றுமதி, தலித் தொழிலதிபர்கள், கயிறும் ஏற்றுமதியாகிறது, கொய்யாப்பழம் ஏற்றுமதி,

சென்ற வார ஏற்றுமதி உலகம்
சேதுராமன் சாத்தப்பன்


அரிசி ஏற்றுமதி


இந்தியாவிலிருந்து 2011-12 வருடம் மட்டும் 7 மில்லியன் டன்கள் அரிசி ஏற்றுமதியாகியுள்ளது. சென்ற வருடம் இதன் அளவு 2.2 மில்லியன் டன்னாக இருந்தது. பாசுமதி அல்லாத அரிசிக்கு இருந்த ஏற்றுமதி தடையை நீக்கியது, நல்ல விளைச்சல், அதிகம் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளான தாய்லாந்து, வியட்நாம், பாகிஸதான் போன்ற நாடுகளின் விளைச்சல் குறைந்தது ஆகியவை இந்தியாவின் ஏற்றுமதி கூடுவதற்கு முக்கியமான காரணமாக இருந்தது. டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு விழுந்ததும் அரிசி ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய லாபங்களை தரும்.


தலித் தொழிலதிபர்கள்
தலித் மக்களில் தொழிலபதிர்கள் ஒன்று சேர்ந்து ஒரு அமைப்பை நடத்தி வருகிறார்கள். தலித் இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ என்று அந்த அமைப்புக்கு பெயர். இவர்கள் எல்லாம் சேர்ந்து ரத்தன் டாடா தலைமையில் மூன்று நாள் டிரேட் பேர் சமீபத்தி நடத்தினார்கள். 200 தலித் தொழிலதிபர்கள் பங்கு பெற்ற இந்த டிரேட் பேர் அவர்களின் உள்நாட்டு தொழில் வாய்ப்புக்களுக்கும், ஏற்றுமதிக்கு வழி வகுத்தது. பல தொழில் வாய்ப்புக்கள் முடிவு செய்யப்பட்டன. 


கயிறும் ஏற்றுமதியாகிறது
2010-11 கயிறு மற்றும் கயிறு பொருள்கள் ஏற்றுமதி, 808 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இந்தியாவில், தேங்காய் நார் மூலம் தயாரிக்கப்படும் கயிறு மற்றும் கயிறுசார்ந்த பொருள்களுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு பெருகி வருகிறது. கைத்தறி, விசைத்தறி தரைவிரிப்புகள், கயிற்றினால் ஆன ஜவுளிகள், ரப்பருடன் இணைந்த கயிறு வகைகள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்திய கயிறு மற்றும் கயிறு பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளும் நாடுகளில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
நம் நாட்டின் கயிறு மற்றும் கயிறு பொருள்களை 111 நாடுகள் இறக்குமதி செய்து வருகின்றன.


கொய்யாப்பழம் ஏற்றுமதி
கொய்யாபழம் ஏற்றுமதியில் உலகளவில் இந்தியாவிற்கு தாம் முதலிடம். பாகிஸதான் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இறக்குமதி செய்யும் நாடுகள் மத்திய கிழக்கு நாடுகள், யு.கே., சுவுதி அரேபியா, கனடா ஆகியவை. கொய்யா பிரஷ்ஷாகவும், வேல்யு அடிசன் செய்தும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் மிகச் சிறந்த கொய்யாகாய்கள் மஹாராஷ்டிராவில் நாசிக் மற்றும் ஷிரடி ஆகிய இடங்களில் தாம் விளைகிறது. அங்குள்ள பழங்கள் அவ்வளவு சுவை.

இந்த தொடர் பற்றிய கருத்துக்களையும், கேள்விகளையும் எழுத வேண்டிய ஈமெயில் sethuraman.sathappan@gmail.com

No comments:

Post a Comment