Monday, April 9, 2012

ஏற்றுமதியாளர்கள் இப்படியும் ஏமாற்றப்படுகிறார்கள்


ஏற்றுமதியாளர்கள் இப்படியும்  ஏமாற்றப்படுகிறார்கள்

வெளிநாட்டில் இருந்து உங்களிடம் சரக்குகள் வாங்குகிறோம் என்று ஆர்டர் கொடுப்பார்கள். பின்னர் அக்ரிமெண்ட் போடவேண்டும் என்று கூறுவார்கள். அக்ரிமெண்ட் போட்டவுடன் அந்த அக்ரிமெண்டை அந்த நாட்டில் நோட்டரைஸ்  செய்ய வேண்டும் என்று கூறி அதற்கு ஆகும் செலவை இருவரும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று கூறுவார்கள். பின்னர் செலவு 1000 டாலர் ஆகிறது, நீங்கள் 500 டாலர் உங்கள் பங்கை அனுப்பி வையுங்கள் என்று கூறுவார்கள். அதை அனுப்பியவுடன் அமைதியாகிவிடுவார்கள். எந்தவிதமான பதிலும் இருக்காது. ஏனெனில் வேறு ஆளிடம் ஏமாற்ற சென்று விடுவார்கள். இவர்களிடம் கவனமாக இருங்கள். இறக்குமதியாளரை பற்றி நன்னபிக்கை அறிக்கை வாங்கிய பிறகே ஏற்றுமதி செய்யுங்கள். 

No comments:

Post a Comment