Thursday, May 31, 2012

ஜவுளி ஏற்றுமதி வருடத்திற்கு ரூ.150,000 கோடி


ஜவுளி ஏற்றுமதி வருடத்திற்கு ரூ.150,000 கோடி 


சர்வதேச பொருளாதார மந்த நிலையிலும், சென்ற நிதியாண்டில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி, 1,50,000 கோடி ரூபாயாக அதிகரித்திருத்திருக்கிறது. இந்திய ஆயத்த ஆடைகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் அதிகளவில் வரவேற்பு உள்ளது. ஆனால், சமீபத்திய நிகழ்வுகளால் ஐரோப்பிய நாடுகளில், இந்திய ஆயத்த ஆடைகளுக்கான தேவை குறைந்து போயுள்ளது. 

இருப்பினும், தென் அமெரிக்கா மற்றும் புதிய சந்தைகளாக கண்டறியப்பட்டுள்ள ஒரு சில நாடுகளுக்கு இவற்றின் ஏற்றுமதி சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.

நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, 1,300 கோடி டாலராக (65 ஆயிரம் கோடி ரூபாய்) இருக்கிறது.  

டெனிம் துணி வகைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால், இவற்றின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு, அதிகளவில் ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைத்துள்ளன.

No comments:

Post a Comment