Saturday, May 12, 2012

நாட்டின் தானிய ஏற்றுமதி கூடும்


நாட்டின் தானிய ஏற்றுமதி கூடும் 

கடந்த இரண்டு ஆண்டுகளாக, நாட்டின் தானிய உற்பத்தி, சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் நம் நாடு உணவு தானியங்களை அதிகளவில் ஏற்றுமதி செய்யும்.

சில வருடங்களுக்கு முன்பு உணவு தானியங்கள் உற்பத்தி குறைந்து போனதை அடுத்து, மத்திய அரசு, அரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டு களாக, நெல் மற்றும் கோதுமை உற்பத்தி, உள்நாட்டுத் தேவைக்கும் அதிகமாக உள்ளது.

சென்ற செப்டம்பர் மாதத்தில், கோதுமை மற்றும் சாதாரண வகை அரிசி ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 

அண்மைக் காலமாக, நம் நாடு, மத்திய கிழக்கு நாடுகள், தென் கிழக்கு நாடுகளுக்கு, அரிசியை ஏற்றுமதி செய்து வருகிறது. வங்க தேசத்திற்கு, குறைந்தளவில், கோதுமையும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 120 கோடிமக்கள் தொகை கொண்ட நம் நாட்டிற்கு, ஆண்டுக்கு 7.60 கோடி டன் கோதுமையும், 9 கோடி டன் அரிசியும் தேவைப் படுகிறது. அதே சமயம், இவைகளின் உற்பத்தி நமக்கு தேவையை விட அதிகரித்துள்ளது. 

No comments:

Post a Comment