Monday, July 2, 2012

மாம்பழம் இல்லாத ஏற்றுமதி உலகமா ?


மாம்பழம் இல்லாத ஏற்றுமதி உலகமா ? 

மாம்பழம் சீசன் முடியப்போகிறது. மாம்பழம் பற்றிய செய்திகள் இல்லாமல் ஏற்றுமதி செய்திகளா? இருக்கவே முடியாது, கஷ்டம் தான். பண்டிட் நேரு தான் இந்திய மாம்பழங்களை உலகளவில் பிரபலப்படுத்தியவர் என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். பண்டிட் நேரு அவர்கள் மாம்பழம் சீசன் டயத்தில் எப்போது வெளிநாடு சென்றாலும் இந்திய மாம்பழங்களை குறிப்பாக அல்போன்சா மாம்பழங்களை தான் எடுத்து செல்வார் பரிசாக அளிக்க. ஒரு சமயம் அல்போன்சா சீசன் முடிந்து விட்டதால், பங்கனப்பள்ளி எடுத்துச் செல்லுங்கள் என்று பரிந்துரை செய்யப்பட்டது. அதை கொண்டுவரச் சொல்லி சுவைத்து பார்த்தவர் அதன் சுவைக்கு அடிமையாகி விட்டார். அவ்வளவு சுவையானது பங்கனப்பள்ளி. இது போல வெளிநாட்டு தூதுவர்கள் இந்தியா வருகை தரும் போது தற்போது பழக்கம் என்னவெனில் மாம்பழங்களை சுவைத்துப் பார்க்க சொல்வது தான். உத்திரபிரதேச மாநிலத்திற்கு வந்திருந்த வெளிநாட்டு தூதுவர்களை அங்கு விளையும் தசேரி மாம்பழத்தை சுவைத்துப் பார்க்க கொடுத்திருக்கிறார்கள். அதை அவர்கள் விரும்பி உண்டிருக்கிறார்கள்.  

No comments:

Post a Comment