Monday, August 20, 2012

சீரகம் ஏற்றுமதியும் உயர்வு, விலையும் உயர்வு


சீரகம் ஏற்றுமதியும்  உயர்வு, விலையும் உயர்வு 
 
உலக அளவில் சர்வதேச அளவில், இந்திய சீரகத்திற்கு தேவை அதிகரித்து வருகிறது. இதனால் இதன் விலை உயர்ந்துள்ளது. உள்நாட்டில், குஜராத் மாநிலத்தில் தான் சீரகம் அதிகம் விளைகிறது. ஆனால் அங்கு மழை குறைவால் உற்பத்தி குறைந்து விலை கூடி வருகிறது. ஏற்றுமதியில்  உலகளவில், சீரக உற்பத்தியில், சிரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன. இந்நாடுகளில், இதன் உற்பத்தி குறைந்துள்ளதால், பல நாடுகள், இந்திய சீரகத்தை இறக்குமதி செய்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றன. இதனாலும், இதன் விலை உயர்ந்துள்ளது. உலகளவு சந்தைகளுடன் ஒப்பிடும் போது, இந்திய சீரகத்தின் விலை குறைவாக உள்ளது. 2011-12ம் பருவத்தில், உள்நாட்டில் சீரக உற்பத்தி, 40 லட்சம் மூட்டைகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, கடந்த 2010-11ம் பருவத்தில் 29 லட்சம் மூட்டைகளாக இருந்தது. ஒரு மூட்டை என்பது 55 கிலோ ஆகும். சென்ற ஏப்ரல் மாதத்தில், 2,500 டன் சீரகம் ஏற்றுமதியாகியுள்ளது

No comments:

Post a Comment