Sunday, September 16, 2012

ஏற்றுமதியில் விவசாயம்


ஏற்றுமதியில் விவசாயம்
ஏற்றுமதி இறக்குமதி 
இன்றைய இளைஞர்கள் பலர் விவசாயம் என்றாலே காத தூரம் ஓடி விடுகின்றனர். தந்தை விவசாயத்தில் இருந்தாலும் மகன் விவசாயத்தில் ஈடுபடக்கூடாது என்று நினைக்கும் அப்பாக்களும், அப்பா ஈடுபட்டாலும் தான் விவசாயத்தில் ஈடுபடக்கூடாது என்று நினைக்கும் மகன்களும் பெருகிவரும் காலம். ஏன் அக்ரிகல்ச்சர் படித்த மாணவர்களே வொயிட் காலர் வேலைக்குத் தான் செல்ல நினைக்கிறார்கள். ஆனால் சென்ற வருடம் இந்தியாவின் ஜி.டி.பி. யில் அக்ரிகல்ச்சர் தான் 14.5 சதவீதம் பங்களித்துள்ளது. மேலும், இந்தியாவின் ஏற்றுமதியில் அக்ரிகல்ச்சர் 10.5 சதவீதம் பங்களித்துள்ளது. 

இந்தியா அதிக அளவு நேரத்தையும், பணத்தையும், உடல் உழைப்பையும், தண்ணீரையும் அக்ரிகல்ச்சருக்காக செலவழிக்கிறது எனவும், இதை செலவழிக்காமல் நமது நாட்டிற்கு தேவையானவைகளை அதாவது உற்பத்திக்கு மேல் இறக்குமதி செய்து கொள்ளலாம் என்றும், இதனால் மிச்சப்படும் விளைநிலங்களை தொழிற்சாலைகள் அமைக்க பயன்படுத்தலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. எப்படி இருக்குங்க?

1 comment:

  1. வணக்கம் அய்யா,
    தங்களின் இந்த தளம் மிகவும் பயனுள்ளதாய் உள்ளது,
    நன்றிகள்
    நேற்று 163 இன்று 159 - traffic rank
    வாழ்த்துக்கள்

    ReplyDelete