Tuesday, January 22, 2013

ஐ.டி.சி. வாங்கும் ஊதுபத்தி, நீங்க விற்கத் தயாரா?


ஐ.டி.சி. வாங்கும் ஊதுபத்தி, நீங்க விற்கத் தயாரா?

இந்தியாவில் அதிக அளவு ஊதுபத்தி விற்பவர்களில் ஐ.டி.சி. கம்பெனியும் ஒன்றாகும். ஏன் முதலிடத்திலேயே வரலாம். ஏற்றுமதியிலும் சிறந்து விளங்குகிறார்கள். இந்தியாவில் அகர்பர்த்தி மார்க்கெட் 3000 கோடி ரூபாய் மதிப்புள்ளது. இதில் குடிசைத் தொழில் போல் செய்பவர்கள் தாம் அதிகம் இருக்கிறார்கள். ஆர்கனைஸ்டாக செய்பவர்கள் சிலர் தாம். 3000 கோடி ரூபாய் மார்க்கெட்டில் ஐ.டி.சி., க்கு 7 முதல் 8 சதவீதம் மார்க்கெட் இருக்கிறது. இவர்கள் சிறிய உற்பத்தியாளர்களின் மார்க்கெட்டிங் பிரச்சனைகளை சமாளிக்கும் விதமாக அவர்களிடமிருந்து வாங்கி விற்கிறார்கள். ஆனால் இவர்களிடம் விற்பது என்பது மிகவும் கஷ்டமான காரியம்.  குவாலிட்டி விஷயத்தில் அவ்வளவு ஸ்டிரிக்டாக இருப்பார்கள். மங்கள்தீப் என்ற பெயரில் உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் விற்கிறார்கள். சிறிய அளவில் அகர்பர்த்தி தயாரிப்பவர்கள், மார்க்கெட்டிங் செய்ய இயலாதவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம். 

2 comments:

  1. I want to sell to itc. Could u pls tell me how to sell to itc?. My email id. anwardeen@meptool.com

    ReplyDelete